கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ரயில்களில் 30 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் சிறப்பு ரயிலான, சுவிதாவுடன், சமீபத்தில் மகாமானா எக்ஸ்பிரஸ் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில்களில் கூடுதல் வசதிகள் இருப்பதால் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஹம்சபார், தேஜாஸ், உதய் ஆகிய பெயர்களில் புதிதாகச் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1