விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் அந்தப் போட்டியில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அஜித். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவரும் டி.இமான் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்த லிஸ்ட்டில் தற்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், விக்ரம் வேதா படத்தைத் தந்த புஷ்கர்- காயத்ரி ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இது குறித்து அஜித்துக்கு நெருக்கமானவர்கள் பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர்கள் எச். வினோத், புஷ்கர்-காயத்ரி ஆகிய இருவரும் அஜித்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். ஆனால் இன்னும் இருவருடைய கதைக்கும் அஜித் ஒப்புதல் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
அஜித்தின் 59ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்த படத்தை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.�,