Uமெரினாவில் மைனர் குளிக்கத் தடை!

public

மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த தாம்பரத்தைச் சேர்ந்த வினோத்(14),சதீஷ்குமார்(14),கிண்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(14) ஆகிய மூவரும் நேற்று(பிப்ரவரி 1) மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மாயமாகினர். ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும் தேடி வந்தனர். இன்று பட்டினம்பாக்கம், சாஸ்திரி நகர் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் அவர்களின் உடல் கரை ஒதுங்கின.

இந்நிலையில், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று(பிப்ரவரி 2) உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளிக்கக் கூடாது. தடையை மீறி பிள்ளைகளை குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களைக் கடற்கரைக்கு அழைத்துவரும்போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீச்சல் தெரிந்திருந்தாலும், கடல் சீற்றத்தின்போது தண்ணீரில் இறங்க அனுமதிக்கக் கூடாது. நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை ஆபத்தான பகுதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியாததால், நீச்சல் தெரிந்தாலும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரைக்கு மாணவர்கள் வருவதை தடுக்க பெற்றோரும், ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2017-18ஆம் ஆண்டில் மட்டும் 15-30 வயதுக்குட்பட்ட 20 பேர் மெரினா கடற்கரையில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர் என போலீஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *