_வேலைவாய்ப்பு: அரசுத் துறைகளில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசுக்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மற்றும் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 537

பணியின் தன்மை: Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer

ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,13,500

கல்வித் தகுதி: Civil, Architectural Assistantship, Handloom Technology, Textile Manufacture ஆகிய பிரிவுகளில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 04.04.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share