தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 5,981 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 109 பேர் உட்படத் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,948 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,43,930ஆக உள்ளது. 52,364 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று புதிய உச்சமாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,30, 564ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இன்று 4,695 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
**-கவிபிரியா**�,