pதமிழகத்தில் 10ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (அக்டோபர் 8) மாலை வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 5,088 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 6,40,943 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், இன்று ஒரே நாளில் 5,718 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,86,454 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 44,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,295 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,78,108ஆக அதிகரித்துள்ளது. கோவையில், இன்று 448 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share