tபூரண சுதந்திரம் பெற்றேன்: நாஞ்சில் சம்பத் !

Published On:

| By Balaji

சசிகலாவை சந்தித்த பின்னர் நஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விபரம் வருமாறு;

கே: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே.சசிகலாவை ஏற்றுகொள்ள முடியாது என்று நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்தீர்கள். ஆனால் இன்று சந்தித்துள்ளீர்கள். நான்கு நாட்களில் ஏன் இந்த மாற்றம் ?

பொது வாழ்விலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தேன் . அது நாடுமுழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரத்த சொந்தங்கள் தவிர்த்து அனைத்து நண்பர்களும் , கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று என்னை வற்புறுத்தினார்கள். என் பேச்சும் இயக்கப்பணியும் கழகத்திற்கு தேவை என்றார்கள். சின்னம்மாவை சந்திக்கச் சொன்னார்கள் . எதைபற்றியும் சிந்திக்காமல் சின்னம்மாவை சந்தித்தேன். ரொம்ப பெருந்தன்மையாக நடந்துகொண்டார்கள்.

கே: முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் சுதந்திரமாக செயல்பட முடிந்தது , சசிகலாவிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருந்தீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

பரிபூரண சுதந்திரம் கிடைத்தது போல் உணர்ந்தேன் , பார்த்தவுடன் வாங்க வாங்க என்று வரவேற்றார். அதன் பிறகு, “ஒன்றுமில்லை நீங்கள் இயல்பாக பணியாற்றலாம்” என்று கூறினார்.

கே: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க அவருக்கு தகுதியுண்டு ஆனால் அவருக்கு கீழ் பணியாற்ற எனக்குத் தகுதி இல்லை என்று விமர்சனம் செய்திருந்தீர்கள். இப்போது சசிகலாவுக்கு அந்த தகுதி வந்துவிட்டதாக உணர்கிறீர்களா?

அதிகாமாகவே வந்துவிட்டதாக உணர்கிறேன் , ஏனென்றால் நான் அவர்களை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதிய பின்னனியில் அவர் என்னை ஏற்றுகொள்கிறார் என்றால் ஜனநாயக பண்பின் உச்சம் அவர்களிடத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share