சத்குரு ஜகி வாசுதேவ்
கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் வைரஸான கொரோனா, உலகம் முழுவதும் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சவாலான இந்த நேரத்தில் நாம் என்ன செய்வது என்று திகைத்து நிற்கையில், நமக்கு தெளிவையும், நம்பிக்கையும் ஊட்டும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தினமும் மாலை 6 மணிக்கு யூ – டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் உங்களுக்காக…
**சத்குரு**
முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து கொள்ளக்கூடிய ஒன்று இல்லை. பொதுவாக, இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். மருத்துவ ரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம். என்னளவில், நான் இப்படித் தான் பார்க்கிறேன், நம்புகிறேன். பல்வேறு காரணங்களால், மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும் போது, உணவுப் பழக்கங்களை பார்க்கும் போது, உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும் போது, தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள்!
உணவு பழக்க வழக்கங்களாலும், பயிற்சிகளாலும், தட்பவெப்ப சூழ்நிலையாலும், வேறு பல அம்சங்களாலும் இயற்கையாகவே இப்படி இருக்கிறார்கள். நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வெப்பமண்டல பகுதியில், இந்த மண்ணில் தான் மற்ற எந்த இடங்களை விடவும் அதிகளவில் உயிர் வடிவங்கள் வாழ்கிறது. நுண்ணுயிர்கள் உட்பட, இங்கே வாழும் உயிர்களுடைய எண்ணிக்கையும் வகைகளும் மிக மிக அதிகம். அதனால், இந்த நிலத்தில் வாழ்வதாலேயே இந்த உடலமைப்பு இன்னும் உறுதியாகிறது. ஏனெனில், உயிர் வடிவங்கள் எல்லாவற்றிற்கும் நாம் எப்போதும் வெளிப்படுத்தப்படுகிறோம். இது ஒரு அம்சம். அடுத்தது உணவு, இன்னொரு விஷயம் வாழ்க்கை முறை. இந்த எல்லா அம்சங்களும் இங்கே சேர்ந்து இருக்கிறது.
நாம் பெரும்பாலும் விவசாய சமுதாயங்களாக இருப்பதனால், இந்த தலைமுறையை அப்படி சொல்லிவிட முடியாது என்றாலும், முந்தைய தலைமுறைவரையிலும் நாம் அனைவருமே விவசாய சமுதாயங்களாகவே இருந்து வந்தோம். அதனால் மக்கள் நிலத்திலேயே வாழ்ந்தார்கள். அதுதான் அவர்களுக்கு அபாரமான உறுதியை கொடுத்தது. ஆனால் வெளியே, உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ,மக்கள்தொகையில் சுமார் 80 சதவிகிதத்தினர் தோராயமாக 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தில் இருந்து விலகியிருக்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரையில், நாம் நிலத்தைவிட்டு விலகியிருக்கத் துவங்கி 25, 30 ஆண்டுகள் தான் ஆகிறது. மண்ணோடு நேரடி தொடர்பில் நம் மக்கள் வாழ்ந்ததனுடைய பலன் இன்னும் நம்மிடம் தொடர்கிறது. இது இப்படியே தொடர்ந்து நமக்கு இருக்காது. எல்லோருமே உயரமான அடிக்குமாடி கட்டிடங்களில் தொடர்ந்து வாழத்துவங்கினால், நிலத்துடன் நேரடி தொடர்பில் இல்லாமல் ஆய்வுக் கூட எலிகளைப் போல எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வாழ்ந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கீழே போகும். ஆனால் நமக்கு இதுவரையிலும் எல்லாமே சாதகமாகவே இருந்து வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஒரே நாளில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கையான தீர்வு கிடைத்து விடாது. ஆனால், காலப்போக்கில் இதன் பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும். பொதுவான, எளிதாக கிடைக்கும் விஷயங்களை பற்றி நாம் பார்ப்போம். ஒரு விஷயம் என்னவென்றால், இதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
நாம் புனிதமான சாம்பலை பயன்படுத்தும் மக்கள். நாம் எப்போதுமே ஏதோ ஒரு விதத்தில் சாம்பலை பூசியிருக்கிறோம். எப்படி பயன்படுத்துவது என்பது தெரிந்தால், பல விதமான சாம்பல் இருக்கிறது, இணையத்தில் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்க முடியாது. ஆனால், சாம்பலை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் அது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
**வேப்பிலை** – இது கிட்டத்தட்ட நம் தேசம் முழுவதுமே மலைப்பகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தினசரி 5 அல்லது 6 வேப்பிலைகளை உட்கொள்ளலாம்.
**மஞ்சள்**- இது எப்படியும் எல்லா இடத்திலும் எளிதாக கிடைக்கும் ஒன்று. இப்போது நேனோடர்மரிக் என்று ஒன்றை உற்பத்தி செய்கிறார்கள். இதை உடல் உள்ளே எடுத்துக்கொள்ளும் சதவிகிதமானது சாதாரண மஞ்சளை விட மிக அதிகம் என்கிறார்கள். தினமும் ஒரு கொண்டைக் கடலை அளவுக்கு மஞ்சளை உருண்டை செய்து வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக்கொள்ளலாம் இதுவும் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பெரிய விதத்தில் மேம்படுத்தும்.
**மலை நெல்லிக்காய்** – இதை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் இடித்த குறுமிளகு அல்லது பச்சை மிளகுடன் சேர்த்து தேனில் ஊற வைக்க வேண்டும். இதை தேனில் ஊறவைத்து தினமும் மூன்று வேளையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு சாப்பிடலாம்.
இது போன்ற எல்லாமே உங்கள் உடலில் எப்போது சிறப்பாக வேலைசெய்யும் என்றால், நீங்கள் வெறும் வயிராக இருந்து, முதல் உணவாக இவற்றை எடுத்துக் கொள்ளும்போது தான்.
இவை எல்லாவற்றையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம். 4 ல் இருந்து 8 வாரத்தில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பார்க்க முடியும்.
கற்றுத் தருவதற்கு கடினமான யோகப் பயிற்சிகள் இருக்கிறது. ஆனால் இப்போது எளிமையான ஒரு உச்சாடனம் செய்வதும், ஈஷா கிரியா பயிற்சி செய்வதும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
[யோக யோக யோகேஸ்வராய என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையை இந்த வீடியோவை]( https://www.youtube.com/watch?time_continue=152&v=1ZYpPsS85a8&feature=emb_logo) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
[ஈஷா க்ரியா பயிற்சியை கற்றுக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்](https://www.youtube.com/watch?time_continue=1&v=EwQkfoKxRvo&feature=emb_logo)
இதில் நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இது கொரோனா வைரஸ்க்கான சிகிச்சை இல்லை. இது அதை தடுப்பதற்கான வழிமுறையும் இல்லை.
நான் உச்சாடனம் செய்துவிட்டேன். அதனால் நான் பொறுப்பில்லாமல் செயல்கள் செய்வேன் என்று நீங்கள் கிளம்பினால்- இது அந்த மாதிரி வேலை செய்யாது. இதை நீங்கள் தொடர்ந்து செய்து வர, காலப்போக்கில் உங்கள் உடலமைப்பை வலுப்படுத்துவதற்கானது இவையெல்லாம். அப்போது தான் அடுத்த வைரஸ் வரும் போது அதை கையாள்வதற்கு நீங்கள் இன்னும் சிறப்பான நிலையில் இருக்க முடியும்-நீங்கள் அப்போதும் பிழைத்து இருந்தீர்கள் என்றால். ஆம் இதை சாதாரணமாகவும் நினைத்துவிடாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் இப்போது இதுதான் மிகப்பெரிய சவால். இந்தக்காலகட்டத்தைக் கடந்து நாம் உயிரோடு இருப்போமா என்பது தான் இதற்கு அர்த்தம்.
இது வேறு யாரோ ஒருவருக்கு எங்கயோ தொலைதூரத்தில், சீனாவிலோ, இத்தாலியிலோ தானே நடக்கிறது என்று நினைத்து கொள்ளாதீர்கள்.
அடுத்த 6ல் இருந்து 8 மாதங்கள் கடந்தும் நீங்கள் உயிர் வாழ்ந்தால் நாம் இதை பொறுப்பாக கையாண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ்ந்தால் தான் நாம் இதை நன்றாக நடத்தியிருக்கிறோம் என்று அர்த்தம். நாம் விழிப்புணர்வாக, பொறுப்பாக வாழ்ந்திருக்கிறோம் என்றும் அர்த்தம். ஆனால் இதைக் கூட துரதிருஷ்டவசமாக அரசுகள் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் பலரும் இது இப்போது அவசியம் என்பதை உணராமல் இருக்கிறார்கள், இது ஏதோ கட்டுக்கதை என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது கட்டுக்கதை இல்லை. இது நம் முன் காத்துக்கொண்டு நிற்கும் ஒரு பேரிடர். இதை நாம் நிச்சயம் சரியாக கையாள வேண்டும்.
சவாலான நேரத்தில் சத்குருவுடன் நேரலை ஒளிபரப்பு, சத்குரு தமிழ் யூ டியுப் சேனல், சத்குரு முகநூல் பக்கம் மற்றும் சத்குரு செயலியில் தினமும் மாலை 6 மணியில் இருந்து 6:40 வரை ஒளிபரப்பாகிறது.
�,