குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மெரினா சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அதனால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று(ஜனவரி 20) காலை ஆளுநர், முதல்வர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதுபோலவும் வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப்., காவல்துறை, தீயணைப்பு படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு ஒத்திகையும், காவல்துறையின் வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
**போக்குவரத்து மாற்றம்**
குடியரசு தின ஒத்திகை நடைபெறும் நான்கு நாட்களும் அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர்சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ்சந்திப்பு, சிவசாமி சாலை அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் பிற வாகனங்கள், சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும்கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ், கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயபேட்டை மருத்துவமனை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும்வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.
பாரதி சாலை மற்றும் பெல்ஸ்ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ்ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.
வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜீ.பி. ரோடு, ராயப்பேட்டை மணிகூண்டு, நடேசன் சாலை, சாந்தோம் சாலை, வழியாக அடையாறு சென்றடையலாம்.
வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.
**-வினிதா**
�,