Rதமிழகத்தில் பேனர் வைக்கத் தடை!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது குறித்த பேனர்கள், கட்அவுட் வைக்கத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள், கட்அவுட் வைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, இன்று (மார்ச் 14) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதித்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு மக்களைக் கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share