காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ ஜூஸ் சாப்பிட விரும்பாதவர்கள் ரிலாஸ்க் டைமில் இந்த ஜூஸ் அருந்தி புத்துணர்ச்சி பெறலாம். உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.
**எப்படிச் செய்வது?**
வட்டமாக வெட்டிய நான்கு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு சிறிய பழத்தின் எலுமிச்சைச்சாறு பிழிந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
**சிறப்பு**
வைட்டமின் சி சத்து நிறைந்த ஜூஸ் இது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
**குறிப்பு**
வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை அருந்த வேண்டாம்.
.�,