வழக்கமாக பரோட்டாவுக்கு மைதா மாவை தண்ணீர், உப்பு, சிறிதளவு சர்க்கரை ஆகியவை கலந்து முதலில் இரண்டு மணி நேரம் வரை ஊறவைப்பார்கள். பிறகு எண்ணெய்விட்டு பிசைந்து மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவைத்து பரோட்டா தயாரிப்பார்கள். ஆனால், கோதுமை பரோட்டாக்களுக்கு அப்படிச்செய்ய வேண்டியதில்லை. சப்பாத்திக்குச் செய்வது போன்று கோதுமை மாவைப் பிசைந்துகொண்டால் போதும். அதில் நமக்குப் பிடித்த பொருட்களைச் சேர்த்து பரோட்டா செய்தால் சுவை இரட்டிப்பாகும். அதற்கு உதாரணம், இந்த பனீர் கோதுமை பரோட்டா.
**என்ன தேவை?**
கோதுமை மாவு – ஒரு கப்
பனீர் துருவல் – ஒரு கப்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, அதில் மசாலா கலவையை வைத்து சப்பாத்தி வடிவில் தட்டிவைக்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பட்டாணி கோதுமை பரோட்டா](https://www.minnambalam.com/public/2021/08/02/1/green-peas-wheat-patotta)
�,