mஅடக்கம் செய்வதைத் தடுத்தால் 3 ஆண்டு சிறை!

public

நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது.

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீதும், டிரைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, சைமன் உடலை அடுத்து, அவரது நண்பர் பிரதீப் காவல்துறை உதவியுடன் வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்தார்.

சோகமான இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்த 21 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசினால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடும் தண்டனை வழங்கும் நோக்கில் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதை தடுப்பதும், தடுக்க முயற்சி செய்வதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகையை செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி அபராதம் உள்பட குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0