ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உற்சவர் சிலை மாற்றப்படவோ, கடத்தப்படவோ இல்லை என்று தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் உற்சவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலிலுள்ள பழங்காலப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் சிலை தொடர்பாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இக்கோயிலின் தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள உற்சவர் சிலை எங்களை மீறி மாற்றப்படுவதற்கோ, கடத்தப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை. கோவிலில் தான் உற்சவர் சிலை உள்ளது. நாங்கள் தினமும் இந்தச் சிலைக்கு தான் பூஜை செய்கிறோம். ஸ்ரீரங்கம் கோவிலில் முறைகேடு நடந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.
�,”