oசிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் மஞ்சிமா

Published On:

| By Balaji

சிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கடை திரைப்படம் 2012ஆம் ஆண்டில் வெளியானது. சமூக அரசியலை பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன நீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இப்படத்தை புதுமுக இயக்குநரான கமலக்கண்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கமலக்கண்ணன் தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வட்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதமே தொடங்கிவிட்டன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இப்படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய மஞ்சிமா மோகன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. 2019ஆம் ஆண்டின் மத்தியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share