புத்துணர்வு முகாமில் யானையை கடுமையாக தாக்கும் பாகன்கள்!

Published On:

| By Balaji

யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை பாகன்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகம் முழுவதிலுமிருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவும் பங்கேற்றுள்ளது.

கோவை – தேக்கம்பட்டி யானைகள் முகாமில் யானை ஒன்றை பாகன்கள் கொடூரமாகத் தாக்கிய கட்சிகள் வெளியாகியுள்ளன.

கட்டளையை மதிக்கவில்லை என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் யானை மீது தாக்குதல் என தகவல் pic.twitter.com/IieMoilFxP

— Sunil (@TweetsOfSunil) February 21, 2021

இந்நிலையில் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை அதன் பாகன்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு மரத்தடியில் யானையைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்குகின்றனர். இதனால் வலி தாங்க முடியாத ஜெயமல்யதா பிளிறுகிறது.

பாகன்கள் கட்டளையை யானை கேட்காததால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் யானையைத் தாக்கும் பாகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share