8
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்குக் கடன் வழங்க ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாக்ஸி போக்குவரத்துச் சேவை நிறுவனங்களான ஓலா, உபேர், மெரு ஆகியவை முத்ரா திட்டத்தில் இணைந்து சுமார் 35,000 வேலைவாய்ப்புகளையும், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோரையும் உருவாக்க அரசுடன் கைகோர்த்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், “ஓலா, ஃபிளிப்கார்ட், உபேர், ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களில் சிறிய தொழில்முனைவோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அவர்கள் தங்களுக்கான கடனுதவியைப் பெற்றுப் பயன்பெறலாம்.
அதேபோல, அமுல் நிறுவனம் தனது 36 லட்சம் உறுப்பினர்களின் வேளாண் சாராத வருவாயைப் பெருக்க இத்திட்டத்தில் இணைந்து செயல்பட ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு, பால் கறவை எந்திரங்கள், குளிர்பதன அறைகள், பால் முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கான நிதியுதவியை விவசாயிகள் பெறலாம். ஒயோ, அமேசான் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.�,