சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் தனது ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை 1000 ரூபாய் வரை குறைத்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் க்ஷியோமி நிறுவனம், இந்தியாவில் அதன் ரெட்மி நோட்-4 மாடலின் விலையை 1000 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதன்படி ரூ10,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 3GB RAM, 32 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட்-4 மாடலின் புதிய விலை ரூ.9,999க்கும், ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட்-4 மாடலின் புதிய விலை ரூ.11,999க்கும் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து க்ஷியோமி இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில், தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட்-4 ஸ்மார்ட்போனின் விலையில் 1000 ரூபாயை நிரந்தரமாகக் குறைத்துள்ளோம்” என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தச் சலுகை ஃபிளிப்கார்ட், Mi.com/in இணையத்தின் மூலம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.11000 வரையில் எக்சேஞ் ஆஃபரும் வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, இந்தியாவில் ரெட்மி நோட்-4 ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. மேலும் க்ஷியோமியின் ரெட்மி நோட்-4, இந்த ஆண்டின் இரண்டு காலாண்டு வரையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய ஸ்மார்ட்போனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,”