சென்னை முன்னாள் காவல் ஆணையர் வி.கே.ராஜகோபாலன் நேற்று இரவு காலமானார். அவருக்கு தற்போது 73 வயதாகிறது. அவர், 1967ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரகத்தின் இயக்குனராகப் பணியாற்றிவந்த அவர், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அவர் போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் (நிர்வாகம்) உட்பட மாநில காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். அவரது நண்பர்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் ராஜகோபாலன் நட்புடன் உதவக்கூடிய மிகவும் சிறப்பான அதிகாரி என நினைவுகூர்ந்தனர்.
வி.கே.ராஜகோபாலன் குறித்து போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ஆர். ஜங்கித், ‘தன்னுடைய இளநிலை அதிகாரிகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார். குற்றமற்ற ஒருமைப்பாடு மற்றும் மனிதாபிமான அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்’ எனத் தெரிவித்துள்ளார்.�,