{இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதம் உயர்வு!

Published On:

| By Balaji

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பெரும் சரிவை சந்தித்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதமாக இருந்தது.

கொரோனாவுக்கு பிறகு தொழில் உட்பட பல்வேறு துறையின் செயல்பாடு காரணமாக இந்த அளவுக்கு உயர்வு இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவிகிதமாகவே இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு பொருளாதாரம், வளர்ச்சியின் பாதையில் உள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதன் மூலம் விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயம், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளில் காணப்பட்ட நேர்மறை வளர்ச்சியே ஜிடிபி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share