Hசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published On:

| By Balaji

V

இந்தோனேஷியாவில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேஷியாவின் கிபாத்துஜா மாகாணத்தில் நேற்று (டிசம்பர் 15) நள்ளிரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மீண்டும் அப்பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது.

கிபாத்துஜா மாகாணத்தில் உருவான நில அதிர்வு, மேற்கு ஜாவா வரை எதிரொலித்துள்ளது. அமெரிக்க புவியியல் சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சுமார் 91 கி.மீ. ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

20 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால்,கட்டடங்கள் அதிர்ந்தன. மேலும், சில இடங்களில் வீடுகள் சரிந்தன.திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஜாவா பகுதியில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும்,குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தோனேஷியா அரசின் சார்பில் நிலநடுக்க பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கக்கூடும் எனவும் அப்பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share