Hஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

Published On:

| By Balaji

மோசமானவற்றில் முதலிடம்!

2014இல் ஆரம்பித்து இந்தியா தவறான பாதையில் மிகவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது – அமர்த்தியா சென்.

இந்தியா மிக மோசமான வளர்ச்சிகொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது – நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்

இன்னும் என்னென்ன சொல்கிறார் தெரியுமா?

“விஷயம் மிக மோசமாகிவிட்டது. 2014ஆம் ஆண்டு முதல் நாம் தவறான பொருளாதாரப் பாதையில் மிக வேகமாகப் பின்தங்கி வந்துள்ளோம். வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார உலகில் நாம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.”

இன்னும் இருக்கிறது.

“20 வருடங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுள் இரண்டாவது சிறந்த தேசமாக விளங்கியது. தற்போதும் இரண்டாம் இடம்தான். ஆனால், மிக மோசமான நாடு எனும் வரிசையில். நல்லவேளை, பாகிஸ்தான் நம்மைத் தற்காத்து முதல் இடத்தில் உள்ளது. இல்லையேல் இந்தியாதான் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்திருக்கும்.”

அமர்த்தியா சென் எழுதிய ‘An Uncertain Glory: India and its Contradiction’ எனும் புத்தகத்தின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்த செய்திகள் இவை. இந்தப் புத்தகத்தை ஜீன் ட்ரிஜ் (Jean Dreze) எனும் பொருளாதார வல்லுநருடன் இணைந்து இவர் எழுதியுள்ளார்.

விழாவில் இவ்விருவரும் பாஜக ஆட்சியின் குளறுபடிகளைச் சான்றுடன் சுட்டி விளாசி எடுத்தனர். “பாஜக பணக்காரர்களின் கைப்பாவை” என்று சொன்னவர்களையெல்லாம் பொருளாதாரம் பற்றித் தெரியாது சமூக விரோதிகளின் சதி வார்த்தைகள் என்று கூறினர். தற்போது நோபல் பரிசு பெற்ற, இந்தியாவின் பொருளாதார பொக்கிஷமாகக் கருதப்படும் ஒருவரே பாஜகவின் தவறுகளை அடுக்கடுக்காகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

**- நரேஷ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share