இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி: புதிய கட்டடம் எப்போது?

public

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் கட்டடம் தற்போது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரியிடம் பெற்றோர் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
விவரம் அறிந்து அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொறியாளர் மாரிச்செல்வத்திடம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அனுமதி வந்தவுடன் பழைய பள்ளி கட்டடம் அகற்றப்பட்டு புதிய புதிய கட்டடம் கட்டப்படும்” என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.