gபழவேற்காடு மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

public

முகத்துவாரப் பகுதியைத் தூர் வாரக் கோரி நடத்தப்பட்ட பழவேற்காடு மீனவர்களின் போராட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியிலுள்ள முகத்துவாரத்தைத் தூர் வாரக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் அப்பகுதியிலுள்ள மீனவர்கள். முகத்துவாரப் பகுதி மணல் திட்டுகளாக மாறிவருவதால், மீனவர்கள் தங்கள் படகுகளை அவ்வழியாகக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்து வந்தனர். இதனைத் தூர் வாரித் தூண்டில் வளைவு அமைக்கும் கோரிக்கையை முன்வைத்து, நேற்று (செப்டம்பர் 17) பழவேற்காட்டைச் சுற்றியுள்ள ஆரம்பாக்கம், கோட்டைக்குப்பம், வைரங்குப்பம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத் துறை இயக்குனர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகும், அதனை ஏற்க மீனவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலையும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்புப் பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று, போராட்டக்காரர்கள் கோரி வந்தனர். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, முகத்துவாரத்தைத் தூர் வார அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார் மகேஸ்வரி. இதன்பின்னர் மீனவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *