கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூன்று படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) காலையில் திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடல் சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு காலை 10 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கி தொடர்ச்சியாக மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 20) மீண்டும் கடல் நீர்மட்டம் தாழ்வானது. இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து மாலை வரை தொடங்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்து சுற்றுலா பகுதி போலீஸார் சுற்றுலாப் பயணிகளை கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்தனர்.
.
விவேகானந்தர் நினைவு மண்டபம்: படகு போக்குவரத்து தடை
Published On:
| By admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel