�
கடந்த ஐந்தாண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் மூலம் ரூ.1,18,881 கோடி வருமானம் கிடைத்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
“ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்துள்ளதா?” என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, 2016-17ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து ஆண்டுதோறும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக. “ஃபாஸ்டேக் திட்டம் தொடங்கப்பட்ட 2016-17ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த சுங்க வசூல் ரூ.17,942 கோடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.21,948 கோடியாகவும், 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.24,396 கோடியாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.26,850 கோடியாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.27,745 கோடியாகவும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மொத்தமாக கடந்த ஐந்தாண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் மூலம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 881 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,