தீபாவளி பலகாரங்கள்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

public

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் தயாரிக்கும் போது, விதிகளை கடைப்பிடிப்பது குறித்து இனிப்பு தயாரிப்பு கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடை எடுப்பது, இனிப்பு பலகாரங்கள் வாங்குவது எனக் கடைவீதிகள் களைகட்டியுள்ளன. தீபாவளி என்றால் பட்டாசு தான் நினைவுக்கு வரும் ஆனால் உணவு பிரியர்களுக்கு வித விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். தமிழகம் முழுவதும் கடைகளில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இனிப்பு பலகார தயாரிப்பு கடைகள், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளைப் பின்பற்றுவது குறித்து கோவையில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று (அக்டோபர் 16) நடத்தப்பட்டது. அதில் பலகாரங்களுக்கு அதிகளவு கலர் பயன்படுத்தக் கூடாது, பலகாரங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், பலகாரம் தயாரிக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியான கலர்களை பயன்படுத்தக் கூடாது. கார வகைகளில் முற்றிலும் கலர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யைத் தேவையான அளவுதான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்யை 4, 5 முறை என மறுமுறை பயன்படுத்தக் கூடாது. அதிகபட்சம் 2 முறை பயன்படுத்தலாம். பிராண்டட் ஆயில் தான் பயன்படுத்த வேண்டும். குறைவான விலைக்குத் தரமில்லாத எண்ணெய் பயன்படுத்தியது கள ஆய்வின் போது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய செய்தித்தாள்களைப் பலகாரங்களுக்கு அடியில் விரிப்பாக பயன்படுத்தக் கூடாது. பலகாரங்களைத் தயாரிப்பவர்கள் ஹெட் மாஸ்க், கையுறை என அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும். அவர்கள் எந்த நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது மெடிக்கல் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். கடைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத் துறை தீபாவளி வரை பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறிய அவர், உணவு பொருட்களில் எதாவது புகார் இருந்தால் அது குறித்து 9444042322 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *