cஅருண் விஜய்: அடுத்த படமும் த்ரில்லர்!

public

தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அறிவிக்கப்படாத ‘த்ரில்லர்’ பிராண்ட் அம்பாசிடராக மாறிய அருண் விஜய் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் தடம் படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய்.

கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு கதாபாத்திரத்துக்கு ஏற்றதுபோல தன்னை மாற்றிக்கொள்ளும் அருண் விஜய்யின் பண்பு இயக்குனர்கள் அவரை அணுகத் தூண்டுவதுடன், அவரது லிமிட்டை ஒவ்வொரு படத்திலும் அதிகரிக்க வைக்கின்றன, அவரது புதிய தோற்றம் தான் இத்தனை பட வாய்ப்புகளைக் கொடுக்கிறதா என்று கேட்டபோது “ ‘குற்றம் 23’ படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் தொடர்பான ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி. இப்போது கமிட் ஆகியிருக்கும் கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது என்றார்.

மேலும் “குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர். ஆனால், இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளைப் பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *