வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு!

Published On:

| By Balaji

வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”எங்கள் கிராமத்தில் 250 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இரண்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும். 2014ஆம் ஆண்டில் வாக்களிக்க சென்ற பட்டியலின மக்களின் மீது குறிப்பிட்ட சாதியினர் தாக்குதல் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தலின்போது, கருங்குளம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அதுபோன்று, சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருங்குளம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 18)தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது, தனி வாக்குச்சாவடி அமைக்க உத்தரவிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share