புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக, தவறான தகவலை கூறிய அதிகாரிகளைக் கண்டித்து மீனவர்கள் இன்று (ஜூலை 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில் கடந்த 9ஆம் தேதி மீன்வளத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஃபார்மலின் என்கிற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் மீன்களில் கலந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு நாட்களாக மீன் வாங்குவதைத் தவிர்த்து வந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் மீன் அங்காடி வியாபாரிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள் முன்வைத்த கோரிக்கையானது “மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளனர்.
அதிகாரிகள், மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதில்லை என தெரிவித்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். தவறான தகவல் தெரிவித்து எங்களுடைய வியாபாரத்தைப் பாதிக்கப்பட செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கோரிக்கையை வலியுறுத்தி இன்றும், நாளையும் கடைகளை திறக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.�,