கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் பயணித்துப் பின்னர், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றில், சாயப்பட்டறை மற்றும் சாக்கடைக் கழிவுகள் கலந்து மாசுபடுவதோடு ஆக்கிரமிப்புகளும் நிறைந்துள்ளன. நொய்யல் ஆற்றைச் சீரமைக்க இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் நொய்யல் சீரமைப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் சார்பாக வருகிற 26ம் தேதி, கோவைக்கு அருகில் உள்ள ஆலந்துறையில் நடைபெறும் ‘நொய்யலை நோக்கி’ என்ற நிகழ்ச்சியில் அன்னா ஹசாரே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். நொய்யல் நதியைச் சீரமைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கிறது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1