அதிமுகவுடன் அமமுக இணையும் என்று மதுரை ஆதீனம் கூறிய கருத்துக்குத் தினகரன் விளக்கமளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அமமுக அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால் அதிமுகவுடன் இணையும் எண்ணமே இல்லை என்று தினகரன் தெரிவித்திருந்தார்.
நேற்று சேலத்தில் அமமுக பற்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமமுகவை ஒரு கட்சியாகவே நான் நினைக்கவில்லை. அமமுக என்று ஒரு கட்சியை பதிவு செய்திருக்கிறார்களா? பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைத்ததுபோல அந்தக் கட்சி உள்ளது என்று விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், தினகரனுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார். அதிமுக கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலுக்காகப் பிரசாரம் செய்வேன் எனக் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் இன்று (மார்ச் 21) விளக்கம் தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவில் இணைப்பதற்காகத் தன்னிடம் சமரசப் பேச்சு நடந்து வருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
�,”