நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரிச்சா சதா நடித்துவரும் நிலையில் தற்போது சிறப்புத் தோற்றத்தில் ஷகிலாவும் வலம் வரவுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் இயக்கிவருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார்.
ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீடு, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாகப் படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான விஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார். சிறப்புத் தோற்றத்தில் ஷகிலாவும் சில காட்சிகளில் வலம்வரவுள்ளார்.
2003ஆம் ஆண்டு இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ஷகிலா ஒரு படத்தில் நடித்திருந்தார். 2015ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஷகிலாவிடம் தெரிவித்து அவரிடம் சம்மதம் வாங்கியுள்ளார். நடிகையான பின் ஷகிலா சந்தித்த பல்வேறு ஏற்ற இறக்கங்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.�,