தமிழ்ப் புத்தாண்டையொட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் மேலும் எட்டு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களையும் அவர்களது விசை படகுகளையும் சிறைபிடித்துச் செல்கிறது இலங்கை அரசு. அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 10) மீண்டும் நீதிபதி ஆர்.சபேசன் முன்னிலையில் எட்டு மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு ஆரம்பம் முதல் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.�,