nதக்காளி விலை உயர்வு ஒரு மாதம் நீடிக்கும்

public

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார், ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 5 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 29 ரூபாய்க்கும் சில்லறை கடைகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இது குறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட்டிடம் பேசுகையில், “கோயம்பேடு சந்தைக்கு தினசரி 65 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக 40 முதல் 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அங்குள்ள வியாபாரிகளும் தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.” என்று கூறினார்.

மேலும், “இதன் காரணமாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்.” என்று தெரிவித்தார்.

வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *