கொரோனா பரவல்: சுற்றுலாத் துறையில் வேலை இழந்தோர் 2.15 கோடி பேர்!

public

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் துறையில் 2.15 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், “உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். நாட்டில் கொரோனாவுக்கு முன் சுற்றுலாத் துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றி வந்தனர். ஆனால், கொரோனாவின் மூன்று அலைகள் காரணமாக சுமார் 2.15 கோடி பேர் வேலை இழந்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முதல் அலையில் 93 சதவிகிதமும், இரண்டாவது அலையில் 79 சதவிகிதம், மூன்றாவது அலையில் 64 சதவிகிதமும் குறைந்து விட்டதாகவும் கிஷன் ரெட்டி கூறினார்.
இந்தத் துறைக்கு உதவுவதற்காக பயண ஏஜென்டுகள் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கிஷன் ரெட்டி கூறினார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *