சுகாதாரத் திட்டங்கள்: ஐந்து ஆட்சியர்களுக்கு விருது!

தமிழ்நாடு சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான விருதுகளை பெறும் மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
2016-17 ஆம் ஆண்டிற்கான விருதை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானத்திற்கும்,
2017-18 ஆம் ஆண்டிற்கான விருதை திருவாரூரில் ஆட்சியராக இருந்த நிர்மல் ராஜுக்கும்,
2018 – 2019ஆம் ஆண்டிற்கான விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தனுக்கும்,
2019- 20 ஆண்டுக்கான விருதை விருதுநகர் ஆட்சியர் சிவஞானத்துக்கும்,
2020 – 21 ஆம் ஆண்டிற்கான விருதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினிதா