மீனவ இளைஞர்கள் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 மீனவ இளைஞர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் 20 மீனவ இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பினால் www.fisherless.tn.gov.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறியலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-ராஜ்