குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி சேலம் கோட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதிகளில் பயணிகளின் உடைமைகளை போலீஸார் பரிசோதித்து வருகின்றனர். மேலும் இன்று (ஜனவரி 23) முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே அனுப்பப்படும் என்ற ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வே அனைத்திலும் இந்த தடை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.
**-ராஜ்**
.�,