சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!

public

இன்று முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக இரண்டு மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும். இந்தக் காலத்தில் ஆந்திரா மற்றும் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள். கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று (டிசம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில், “டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழ்நாட்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடமும் அவ்வாறே இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் இன்று (டிசம்பர் 3) முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு [ஆன்லைன் மூலமாக](https://www.tnstc.in/home.html) [மற்றும்](https://www.redbus.in/, http://www.busindia.com) ஆகிய வலைதளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பேருந்துகள் விவரங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் தெரிந்துகொள்ள 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463, 94450 14416 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையினை பக்தர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *