Tகிச்சன் கீர்த்தனா: எள்ளுப்பொடி

public

�சூடான சாதத்துடன் சுவையான பொடியைச் சேர்த்து சுவைப்பதற்காகவே ஆந்திர மெஸ்களுக்கு செல்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட பொடி பிரியர்களுக்கு, சத்தான மற்றும் சுவையான பொடி, வீட்டிலேயே செய்யப்படும் இந்த எள்ளுப்பொடி.

**என்ன தேவை?**

கறுப்பு எள் – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 2 (அ) 3

பனை வெல்லம் அல்லது வெல்லம் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் (வறுக்க) – சிறிதளவு

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

எண்ணெயில் உளுத்தம்பருப்பு, கறுப்பு எள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும். (எள்ளில் கல் இருந்தால் கல்லெடுத்து அலசி, பின்னர் பயன்படுத்த வேண்டும்). அனைத்தையும் கலந்து, வெல்லம், உப்பு, சிறிதளவு புளியுடன் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இந்த எள்ளுப் பொடியைக் கலந்து சாப்பிட்டால், ருசியோ ருசி.

**குறிப்பு **

ஈரம் அறவே இல்லாமல் சுத்தமாக காயவைத்து/அரைத்து எடுக்கிற பொடிகளை 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: நெல்லிக்காய் பொடி](https://www.minnambalam.com/public/2021/12/01/2/nellikai-podi)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *