தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்க அழைப்பு மையம்!

public

தமிழ்நாட்டில் வரி செலுத்துவோரை கண்காணிக்க புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்தி வருகின்றனர். அவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்வதை தவிர்க்கவும், வரி செலுத்துவதை தொடர்ந்து வலியுறுத்தவும் புதிய அழைப்பு மையங்கள் உருவாக்கப்படும் என கடந்த சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக நேற்று(நவம்பர் 26) தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வரி செலுத்துவோரை கண்காணிக்க முதற்கட்டமாக 40 பணியாளர்கள் கொண்ட அழைப்பு மையம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக சென்னையில் அமைக்கப்படும். இதற்கான தொடர் செலவினம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.5.45 கோடியாகும். இந்த மையம் ஞாயிறு தவிர மீதமுள்ள ஆறு நாட்களும், காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *