டிஜிபியை சந்தித்து புகார் அளித்த 14 வயது சிறுமி!

public

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, உயிரிழந்த தனது தந்தைக்கு சொந்தமான டிராக்டர், கலப்பை உள்ளிட்ட உடமைகளை மீட்டுத் தரும்படி தமிழ்நாடு டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி தர்ஷனா. இவர் தன்னுடைய தந்தையின் உடமைகளை மீட்டு தரக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து புகார் ஒன்று அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ”எனது சொந்த ஊரானன கரூரில் உள்ள ஒமாந்தூரில் எனது தாய் தந்தை வசித்து வந்தார்கள். கடந்த 2016 ஆம் தாய் தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் நான் ஈரோட்டில் உள்ள எனது பாட்டியுடன் தங்கி படித்து வருகிறேன். கடந்த 2020 ஆம் ஆண்டு எனது அப்பா உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். எனது அப்பாவுக்கு சொந்தமான டிராக்டரை எனது அப்பாவின் அக்கா மகன் பூபாலன் என்பவர் கந்துவட்டி என்ற பேரில் பல தில்லு முல்லு வேலைகளை செய்து டிராக்ரடை எடுத்து சென்று மறைத்து வைத்து விட்டார்.

இது சம்பந்தமாக ஈரோடு காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். அவர்கள், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்க சொன்னார்கள். கடந்த 8 மாதமாக பூபாலன் என்பவரால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இறந்துபோன என் அப்பாவின் மீது பொய்யான கணக்குகளை துண்டு சீட்டில் எழுதி வைத்து என்னையும், என் பாட்டியையும் தரக்குறைவாக பேசி வருகிறார். சுய நலத்திற்காக வாங்காத கடனுக்காக என் அப்பா மீது வீண் பழி சுமத்துகிறார். என் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அவரிடம் உள்ள என் அப்பாவின் டிராக்டர், இருசக்கர வாகனம், கலப்பை, நகை அடகு சீட்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை மீட்டு தருமாறு கண்ணீருடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *