கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாள் வகுப்பு?

public

தமிழ்நாட்டில் கல்லூரிகள் நடைபெறும் நாட்கள் குறித்து உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, காலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கல்லூரிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் இன்று(ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ள அரசாணையில், ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழ்நாடு முதல்வர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளித்துள்ளார்.

அதனடிப்படையில் கல்லூரிகள் திறந்து செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.எல், பி.சி.ஏ, பி.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட இளங்கலை, முதுகலை, பட்டயம் ஆகிய மூன்று ஆண்டு படிப்பு மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும்.

இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தற்போது இரண்டாம் ஆண்டில் பயில்பவர்களுக்கும் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும்.

பி.இ, பி.டெக், பி.எஸ்.சி (வேளாண்மை) உள்ளிட்ட நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமையும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.

பி.ஆர்க், பி.விஎஸ்சி, சட்டம் ஆகிய 5 ஆண்டு பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமையும், மூன்றாம், ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும்.

முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்த பின்னர் சில வாரங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயிற்சி வழங்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைப் பேரிடர் மேலாண்மைத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *