�வருவாய்ப் பற்றாக்குறை நிதி: தமிழகத்துக்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி!

public

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு நான்காவது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை விடுவித்துள்ளது.

மத்திய – மாநில அரசுகளுக்கிடையே வருவாயைப் பகிா்ந்துகொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயைவிட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும்

அதன்படி, 15ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.

இதில் நான்காவது தவணையாக தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 4ஆவது தவணையாக ரூ. 183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

15ஆவது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.1,18,452 கோடியில் தமிழகம், ஆந்திரம், அசாம், அரியானா, இமாசலப் பிரதேசம், கா்நாடகம், கேரளா, மணிப்பூா், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 17 மாநிலங்களுக்கு இதுவரை நான்கு தவணைகளையும் சேர்த்து ரூ.39,484 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 தவணைகளில் மொத்தத் தொகையும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *