pஅவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்!

public

கொரோனா காரணமாக ஜூன் 1 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், எதிர்பார்த்த அளவு பாதிப்பு குறையவில்லை. அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்தாலும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் ஜூன் 11ஆம் தேதி வரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை 9 நீதிபதிகள் மட்டுமே அனைத்து வழக்குகளையும் விசாரிப்பார்கள். இந்த நாட்களில் முக்கிய வழக்குகள் மட்டுமே சிறப்பு அமர்வுகளால் விசாரிக்கப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் 3ம் தேதி வரை, 4-8, 9-11 வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை, 8-11ஆம் தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்.

அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும்.

இது தவிர, ஜூன் 1 முதல் ஜூன் 3வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா,எஸ்.கண்ணம்மாள் அமர்வு ரிட் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளையும்,

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு அனைத்து குற்றவியல் வழக்குகளையும்,

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக ரிட், குற்றவியல், மேல்முறையீடு முன்ஜாமீன் வழக்குகளையும் விசாரிப்பர்.

ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் ரிட், மேல்முறையீட்டு வழக்குகளையும்,

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் அமர்வு குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும்.

நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் தனித்தனியாக ரிட், குற்றவியல், மேல்முறையீடு, முன்ஜாமீன் மனுக்களையும் விசாரிப்பர்.

ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை நீதிபதிகள் டி.ராஜா, வி.சிவஞானம்அமர்வு ரிட் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளையும், நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா அமர்வு குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அப்துல் குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் தனித்தனியாக ரிட், மேல்முறையீடு, குற்றவியல் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பர்.

இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1 முதல் ஜூன் 11 வரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் பொதுநல வழக்குகள், ரிட் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.தாரணி ஆகியோர் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரிப்பார்கள்.

ரிட், உரிமையியல் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை தனித்தனியாக ஜூன் 1 முதல் ஜூன் 7 வரை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோரும், ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நீதிபதிகள் பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜி.சந்திரசேகரன் ஆகியோரும் விசாரிப்பார்கள்.

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், அதே நீதிபதி முன்புதான் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜாமீன் ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *