hதிருப்பதி: மூடப்படும் அலிபிரி நடைபாதை!

public

திருப்பதி – திருமலையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதை வழியாகவும் நடந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அலிபிரி நடைபாதையில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ள நிலையில், தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திருமலை – திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வருகிற 1ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, திருமலைக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலிபிரியிலிருந்து ஸ்ரீவாரி மெட்டுக்கு இலவச பஸ்கள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்லவும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *