<கொரோனா இன்றைய நிலவரம்!

public

தமிழகத்தில் இன்று புதிதாக 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,89,490 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1634 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 8,59,709 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 1083 பேரும், கோவையில் 280 பேரும், செங்கல்பட்டில் 258 பேரும், காஞ்சிபுரத்தில் 115 பேரும், தஞ்சையில் 113 பேரும், திருவள்ளூரில் 158 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,738 ஆக உயர்ந்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *