cஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்!

public

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகத்தில் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மாஹே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நிலை குறித்து கேரளா மற்றும் ஆந்திரப் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும், பள்ளிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மார்ச் 31ஆம் தேதி வரை செயல்படும். கோடை விடுமுறை ஏப்ரல் 1ஆம்தேதி தொடங்குகிறது. எனினும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், அந்தந்த மாநிலப் பள்ளிக்கல்வி வாரியத்தின் தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தைப் பின்பற்றியே பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், பெரும்பாலும், தமிழகத்தைப் பின்பற்றியே முடிவுகளை எடுக்கப்படுகின்றன.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *