விடுமுறை முடிந்து அடுத்த நாள் அலுவலகத்துக்குச் செல்பவர்களில் பலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சீஸ் அவல் செய்து வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாம். நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்
**எப்படிச் செய்வது?**
கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடாக்கி, 200 கிராம் அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து, 50 கிராம் சீஸை துருவிக் கலந்து பரிமாறவும்.
**சிறப்பு**
அனைத்து சத்துகளும் கொண்ட இந்த சீஸ் அவல் அனைவருக்கும் ஏற்றது. சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.�,